Friday 2 June 2017

லிப்ட் (Lift) அழகு தமிழில் மின்தூக்கி .... கதை-1:-
*****************************************************************
முதன் முதலில் ''சுய மெய்''..(Original physical ) அனுபவத்தில் ''லிப்ட்'' பார்த்தது பம்பாயில் ''ப்ரீச் கேண்டி'' (Bombay-Breach Candy)...மருத்துவமனையில்.
1982 டிசம்பரில் குவைத்திலிருந்து ''விசா'' அனுப்பினார் அன்புள்ள அப்பா.
அவர் குவைத்தில் டிபென்ஸ் மினிஸ்ட்ரி டைரக்டர் ஒருவரின் ''வீட்டில்'' டிரைவர் பணி. குவைத்தியார் குடும்பம் செல்வாக்கானது ...
ஒருவர் கல்வி அமைச்சகத்தில் அண்டர் செக்ரட்டரி , ஒருவர் கல்லூரி முதல்வர், வீட்டில் மூத்த உறுப்பினர் பெண்மணி தங்க , வைர , நறுமணப் பொருட்கள் விற்கும் வணிகர் ...
இது அன்றைய குவைத்தில் ...''பொன் கொழிக்கும்'' வணிகம் என்பது வெள்ளிடை மலை உண்மை ....
எனது நான்காண்டுகள் கல்லூரி படிப்பிற்கு P.U.C + B-Com புரவலர் இப்பெண்மணியே.
.
நான் சென்னை லயோலாவில் பி.காம் முடித்து மேற்கொண்டு எம்.காம் சீட்டிற்கு தாமதமாய் விண்ணப்பித்து (காரணம் கொழுப்பு ...நாம படித்த காலேஜில்...பிளா...பிளா ..பிளா ...) அதற்குள் இடங்கள் முடிந்து (அப்போதெல்லாம் 20 சீட்டுக்கள் x 2 செக்ஷன் மட்டுமே )...வேலைக்கு போக தீர்மானித்து ....
1982 டிசம்பரில் ''ப்ரீச் கேண்டி '' மருத்துவமனையில் பணி புரிந்த தாத்தா (அம்மா வழி உறவு ) ஒருவரிடம் ''விசா ஸ்டாம்பிங்'' செய்வது தொடர்பாய் போன வேளை..
அப்போதெல்லாம் எங்கள் ஊரார் யார் என்றாலும் அவர் தான் கதி ....
என்னோட அம்மம்மா உடன் பிறந்த தம்பியே எங்கள் பகுதியில் 1955-ல் குவைத் போன முதல் நபர் ...1983-ல் எங்க குடும்பத்தார் சுமார் 50-க்கும் மேல் குவைத்தில் ...பெரும்பாலும் வீட்டு / கம்பெனி டிரைவர் பணி , ஹௌஸ் பாய் , சமையல் ,தோட்டக்காரர்கள் ...
1952-ல் கத்தார் போன உறவினர் ''அருளப்பர்'' என்பவர் ஆறே மாதத்தில் மனம் வெறுத்து திரும்பி விட்டாராம். அவர் இந்தியன் ரயில்வேயில் எஞ்சின் டிரைவர் பணியில் இருந்து விடுப்பு எடுத்து சென்றதும் காரணம் .
நல்ல மத்திய அரசுப் பணி / ஊதியம் ..கத்தாரிலோ ?...கிடைத்தது யாருக்குத் தெரியும் ?
தாத்தா வாங்கிய ஊதியமோ இந்திய ரூபா அணா பைசாவில் நூறுக்கும் கீழேயே தான் .1962-ல் தான் குவைத் தீனார் புழக்கத்தில் வந்தது . அதுவரையில் இந்திய ரூபா அணா பைசா...தான் புழக்கத்தில் இருந்தது என்பது வரலாற்று உண்மை .
எங்கள் தாத்தா 28 ஆண்டுகள் குவைத்தில் இருந்தார் .1975 வரை நோ ஏர் கண்டிஷன், சீலிங் ஃபேன்...தடித்த கோரைப்பாய் ...அதில் வாளித் தண்ணீரை தெளித்து படுப்பார்களாம். மண் சுவர் வீடுகள் .வெயில் தாங்கும். உணவு மிக மோசம். தாத்தா சமையல் பணி .....எனவே நோ ப்ராப்ளம் ...
தண்ணீரும் மரப் பீப்பாயில் கழுதைகள் சுமந்து வருமாம். ஈராக்கில் இருந்து தண்ணீர் சப்ளை.
இன்று என் பெரியப்பா மகன் 40+ ஆண்டுகள் ...இன்றும் அங்கேயே இருக்கிறார் ...பெயர் ஜேசுதாசன் ...ரெகார்ட் ஹோல்டர் ...
குடும்பத்தில் குவைத் போன ''''''முதல் இளங்கலை பட்டதாரி''''' அடியேன் மட்டுமே ...
தாத்தா ''ப்ரீச் கேண்டி'' கட்ட அடிக்கல் நாட்டிய நாள் 1950-ல் தொடங்கி அங்கு பணி என்பதால் பெரிய செல்வாக்கு உண்டு . 1982-ல் சுமார் முப்பதாண்டு பிளஸ் ... சர்வீஸ் ....எங்கள் ஊர்க்காரர்கள் பலருக்கும் வேலை வாங்கித் தந்து தனி ராஜ்யமே அங்கு நடத்தினார் ....
இந்தியாவின் பல மாநில (கேரளா , கர்நாடகா, ஒரிஸ்ஸா , பீஹார் , உ.பி, ராஜஸ்தான் .....) அனைத்து ஊழியர்களும்...''அண்ணாஜி'' என மதிக்கும் ஒரே நபர்.
மிகுந்த செல்வாக்கு ...நல்ல உயரம் & கட்டுமஸ்து தோற்றம் ...ஆனால் அவர் ஒரு பலாப்பழம் ...கரடு முரடு தோற்றம் ...பிள்ளை மனம் ...அன்பு ...இரவில் / டூட்டி இல்லாத வேளைகளில் நன்றாய்க் குடிப்பார். மதுக்கடை பக்கத்து தெரு சந்தில் ...நடை தூரத்தில் ...சற்று அப்பால் ''காட்பரீஸ் '' சாக்லேட் கம்பெனி ....
சரளமாய் இந்தி ,மராட்டி ,குஜராத்தி பொழிவார் ...
அப்போது 1982 டிசம்பரில் ''ப்ரீச் கேண்டி'' -ல் ...அமிதாப்பச்சன் வயிறு கிழிந்து அட்மிட் ஆகி இருந்தார்.
கமல்ஹாசன் குதம் கிழிந்து மூல நோய் அறுவை சிகிச்சை நோயாளியாக படுத்திருந்தார் ...
ஹேமமாலினி முதல் பெண் குழந்தை ஈன்று இருந்தார் . பரிசோதனை செய்ய அடிக்கடி வருவார்.
மூவரையும் பார்க்க தாத்தாவுடன் சென்ற பெருமை மிகு நிகழ்வு அங்கு ...
அப்போது தான் முதல் லிப்ட் அனுபவம் ...நிகழ்ந்தது ...
ஆனால் அது வெறும் மூன்று மாடிகள் . அடுத்து ஏர் இந்தியா மெய்ன் கட்டிடம் நரிமன் பாயிண்ட் அலுவலகம் போனோம். ஏதோ மெடிக்கல் சர்டிபிகேட் அங்கு கட்டாயம் வாங்குவது வழமை . ஒரு மஞ்சள் புத்தகம் ...அதில் ''Full Dose'' சீல் அடித்து தருவார்கள். குவைத் போகும் நபர்களுக்கு மிகக் கட்டாயம் தேவையாம்.
அங்கு பல மாடிகள் . சரியாக நினைவில்லை .ஆனால் எப்படியும் 20-க்கும் மேல் இருந்தது. இங்கு வேடிக்கையாய் அனுபவிக்க வேண்டுமென்றே மேலும் கீழும் சிலமுறை சென்று மஜாவை அனுபவித்தேன் . ஆனந்தம் ...ஏறக்குறைய சொர்க்கம் ....
ஆனால் அதைவிட இனிய அனுபவம் 40 மாடிகள் போன இனிய அதிர்ச்சி அனுபவம் ஜனவரி 1983...''பொங்கல்'' வேளை கிடைத்தது ....அடுத்த பதிவில் ....

No comments:

Post a Comment