Wednesday 22 February 2017

வயது பதினாறு கையிருப்பு ஒரு தாவணி
மனதில் எப்போதும் ஒரு குறுகுறுப்பு
பக்கத்து வீட்டு மாமா ஏண்டி நல்லா
படிக்கறயான்னு முதுகு தடவிக் கேட்கும்போது
உடலில் ஒரு சிலிர்ப்பு-மனதில் ஒரு குறு குறுப்பு
வெகுளிப்பெண்ணாம் நான்
பள்ளிக்கூடம் போகயிலெ பர்வதம்மா மகன்
மருது பார்க்கும் பார்வை திரும்பிப்
பார்க்காமலே தெரியும் எனக்கு
கழுத்துப் பின்புறம் ஏனோ ஒரு சிலிர்ப்பு
மனதிலே ஒரு குறு குறுப்பு
திரும்பிப்பார்க்கச் சொல்லும் மனது
வெகுளியாம் நான்
அக்கா புருஷன் அடிக்கடி வரும்போதெல்லாம்
அதீதப் பாசம் பொழிவார்
மச்சினி உறவுமுறை
கொடுத்த உரிமை
சினிமா கொட்டகையில் நடுவில் அவர்
இரு பக்கமும் நானும் அக்காவும்
அவர் அக்கா பக்கம் சாயும் போது
கண்டும் காணாதது போல் இருந்தாலும்
மனதில் ஒரு குறு குறுப்பு
வெகுளியாம் நான்
சினிமாக் காதலன் சிங்காரமாய் நடிகையுடன்
ஆடும் நடனம், பின் இருக்கையிலிருந்து
ஏதோ ஒரு உரசல்- காலை எடுடா
பல்லை உடைப்பேன் - மனதுக்குள்
சொல்லிக்கொள்வேன் -அத்தான் கோபம்
உலகப் ப்ரசித்தம்- ஆனலும் மனதுக்குள்
ஒரு குறு குறுப்பு -வெகுளியாம் நான்
அக்காவுக்கு சுகப் ப்ரஸவம் !!!!!!!!!
அக்கா குழந்தயை அள்ளி எடுத்துக்
கொஞ்சி தொட்டிலில் விட்டு விட்டு
ஆஸ்பத்திரியை விட்டுவிட்டுக் கிளம்பி
வீடு வந்து சேர்ந்தோம் நானும் அத்தானும்
அத்தான் அயர்வாய் கட்டிலில் கண்ணயர்ந்தார்
நானும் பாய் விரித்து ஒருக்களித்தேன்
யாரோ என்னைப் பார்க்கிறார்கள்
கண் திறக்காமலே திரும்பாமலே தெரியும்
பார்ப்பது யார் என்று - அக்கா வீட்டில்
இல்லாத ஏக்கம் அத்தானும் ஆண்தானே
வெகுளியாம் நான்
அத்தானும் அழகாய்த்தான் இருக்கிறார்..
சாந்தமான அக்காவின் ஆங்காரமான குரல்
வாடீ என் சக்களத்தி
அவளும் பெண் தானே.......................
அக்கா என் தலை முடியைப் பிடித்து சுவரிலே
மோதினாள்.........ஆஆஆ !!!!!!!!
திடுக்கிட்டு கண் விழித்தேன் !!!!!!!!!!!!
அத்தனையும் கனவா- நல்ல வேளை
நான் துரோகி அல்ல....
வெகுளிப் பெண் தான்

No comments:

Post a Comment