Saturday 11 February 2017

இன்று சித்ரவதை
நாளை அழகு
சிற்பியிடம் மாட்டிய கல்
______________________
கோபுரக் கலசத்தை
அசைத்துப் பார்க்கிறது
குளத்தில் விழுந்த கல்!
______________________
வறுமைக் கோடு
தெளிவாய் தெரிகிறது
விலாவில்!
______________________
சவக் கிடங்கில்
சிரிப்பு எதற்கு?
மின் விளக்கு!
______________________
சூடு ஏற்றுகிறார்கள்
நிச்சயம் அடி உண்டு
பறைக்கு!
______________________
பட்ட மரம்
பூத்திருக்கிறது
காளான்!
______________________
அடி வாங்கியபின்
அணைந்துகொள்கிறது
நெஞ்சோடு பறை!
______________________
அக்கரைக்குச் செல்ல
இலவச படகு
எறும்புக்கு சருகு!
______________________
காயப்படுத்தி
நினைவூட்டியது அம்மாவை
சுவையான தூதுவளை!
______________________
பழங்கால மரம்
நரைத்துவிட்டதோ
உச்சியில் கொக்குகள்!

No comments:

Post a Comment