Sunday 2 August 2020

உணவுப் பாண்டம்

வீட்டிலும் ஹோட்டல்களிலும் பிளாஸ்டிக் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டாலும் கோவில்களில் மட்டும் இலையில் சாப்பாடு தரும் மரபு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நாகரிகம் மிகவும் ஆக்கிரமிக்காத சிறுநகரப் பகுதிகளிலும் கிராமங்களிலும் இன்றும் இலையில் சாப்பிடும் மரபைக் காணலாம். இலையென்றால் வாழை இலை மட்டுமில்லை. நீண்ட நாள் தேவைகளுக்காக வாழை இலைகளை வெயிலில் காயவைத்து எடுத்து பதப்படுத்தி வைத்துக்கொள்வது. அல்லது மந்தாரை இலை போன்றவற்றை பதப்படுத்தி ஈர்குச்சி கொண்டு தைத்து தட்டு போல உருவாக்கி சேமித்து வைப்பது என ப்ளாஸ்டிக்கும் எவர்சில்வரும் உருவாக்கப்படாத காலகட்டத்தில் இந்த இலைகளில் தான் நம்முடைய் தாத்தா பாட்டிகள் சாப்பிட்டு வந்தார்கள்.

இதனை ஊர் பக்கம் ’தையல் இலை’ என்பார்கள்.சுடச்சுட சமைக்கப்பட்டிருக்கும் சாப்பட்டை அம்மா இந்த இலைகளில் பரிமார அதனைச் சாப்பிடும்போது கிடைக்கும் சுவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களே நினைத்தாலும் தரமுடியாது.

காலப்போக்கில் ஆரோக்கியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவர்களும் அவசர மற்றும் அவசியத் தேவைகளுக்காக ப்ளாஸ்டிக் பக்கம் சாய்ந்துவிட, சருகு இலைகளில் சாப்பிடும் மரபு சருகு போலவே மக்கிவிட்டது.

1 comment: