Monday 3 February 2020

மழைத்துளிகள் சிறைப்பிடித்து

ஓட்டின் வழியே
மழைத்துளிகளும்
வீட்டின் உள்ளே
உன் அன்பின்மழையும்
பெய்யெனப் பெய்து
கொண்டிருந்தன...
வாரயிருதியின் மழைகள்
ரம்மியமானவை,
ரசிக்க முடிந்தவை...
கட்டஞ்சாயா
கையில் கிடைத்தால் போதும்
கொட்டமடிக்க ஆரம்பிப்பாய்!!
கடலைக்கறி எப்படி செய்யணும்
கொஞ்சம் சொல்லிக்கொடேன்
கட்டிக் கொண்டே கேட்கையில்
விடலைப் பருவமென நினைப்புனக்கு!
பழம் பஜ்ஜி இப்ப போட்டு தர்றியா
குழைந்து கேட்டு எனக்குள்
நுழைந்து கொள்வாய்...
தேவையில்லை எனினும்
தலை நீட்டி நனைத்து
வருவாய்...
திட்டிக் கொண்டே நான்
துவட்டுகையில்
திட்டம் போட்டு அப்படியொரு
நடிப்பு...
கைகள் குவித்து
மழைத்துளிகள் சிறைப்பிடித்து
கன்னம் நோக்கி
வீசி சிரிப்பாய்...
இப்போது
என்
செல்லக் கோபமெல்லாம்
மழைத் துளிகள் மீது தான்...
நீ
இருக்க வேண்டிய இடத்தில்
அதுகளுக்கு என்ன வேலை??

No comments:

Post a Comment